வீட்டில் கடிகாரத்தை எந்தத் திசையில் வைக்க வேண்டும்? என்ன சொல்கிறது வாஸ்து?

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை....
வீட்டில் கடிகாரத்தை எந்தத் திசையில் வைக்க வேண்டும்? என்ன சொல்கிறது வாஸ்து?

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். அதுகுறித்து வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று விரிவாக பார்ப்போம்.

அனைவருக்குமே வீடு தான் சொர்க்கம். அந்த வீட்டை நாம் நமக்குப் பிடித்தவாறு, பிடித்த பொருட்களால் அலங்கரிப்போம். அதே சமயம் அப்படி அலங்கரிக்கும் போது, அந்தப் பொருட்களை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும்.

மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும் அதை எந்தத் திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்பதைப் பார்க்கலாம்.

• நம் அனைவரின் வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவரில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும், அதையே தவறான திசையில் மாட்டினால், எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

எந்தத் திசை சிறந்தது? கடிகாரத்தைக் கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவரிலும் கடிகாரத்தை மாட்டக் கூடாது. ஏனெனில், தெற்கு யமதர்மராஜனின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவரில் தொங்கவிடுவது நல்லது.

• வீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்தக் கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.

சரி எந்தத் திசை தான் சிறந்தது? வீட்டின் சுவரில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதே போல் கண்ணாடியை வடக்கு கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாகத் தரையில் இருந்து 4 அல்லது 5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்.

• தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவரில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.

எந்தத் திசை சிறந்தது? குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கித் தொங்க விடக்கூடாது. அதே போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது. இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும்.

• மணி ப்ளாண்ட் கொடியை வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதே போல் இந்த மணி ப்ளாண்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.

• பெரிய வீட்டில் இருப்பவர்கள், ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.

எந்தத் திசையில் வைத்தால் நல்லது? இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, நாம் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் முக்கியத்துவம் அளித்து அந்தெந்த திசையில் மாட்டினால் எந்தவித எதிர்மறை ஆற்றலும் நம்மைப் பாதிக்காது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com