எண்கணிதப்படி இந்த பிப்ரவரி மாதம் உங்களுக்குச் சாதகமா? பாதகமா?

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் பிப்ரவரி மாதத்துக்கான எண்கணித பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.
எண்கணிதப்படி இந்த பிப்ரவரி மாதம் உங்களுக்குச் சாதகமா? பாதகமா?

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் பிப்ரவரி மாதத்துக்கான எண்கணித பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஆடம்பர செலவுகள் செய்யாமல் அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். சக ஊழியர்கள் மேலிடம் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. 

பெண்களுக்கு  காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு  பாடங்களை ஒருமுறைக்கு  பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு  உதவும். 

சிறப்பான கிழமைகள்: வியாழன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 1, 3, 6

பரிகாரம்:  நவக்கிரக செவ்வாயை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

{pagination-pagination}
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கற்பனை கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலிதனம் நிறைந்த இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின்  மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். 

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை  வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். அரசியல்துறையினருக்கு மனவருத்தங்கள் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாக புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.

சிறப்பான கிழமைகள்: வியாழன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 2, 9

பரிகாரம்: அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது மனதில் நிம்மதி அதிகரிக்கும்.

{pagination-pagination}
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதை செய்தாலும் அதில் நேர்மை இருக்க வேண்டும் என்ற  கொள்கை உடைய மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் புதிய நபர்களின்  நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். 

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.  பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை  செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கோபமான பேச்சு தலைதூக்கும்.

பெண்களுக்கு அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அரசியல்துறையினருக்கு மனதில் இருந்த கவலை அகலும். மாணவர்களுக்கு  கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

அனுகூலமான திசைகள்: மேற்கு, வடக்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 1, 3, 6

பரிகாரம்:  சிவபுராணம் தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். 

{pagination-pagination}
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொலை நோக்கு பார்வையும் உயர்ந்த  எண்ணங்களும் உடைய நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  பணவரத்து துரிதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு இருந்த சிரமம் குறையும். 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக  செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். சகஜ நிலை காணப்படும். 

பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன்  செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினர் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

சிறப்பான கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி;

அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 4, 9

பரிகாரம்: நாகதேவதையை வணங்கி வருவது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.  

{pagination-pagination}
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சொல்லாற்றல் செயலாற்றல் இரண்டும் ஒருங்கே ஐந்தாம் எண் அன்பர்களே நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த மாதம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து இருக்கும். உங்களது பேச்சை  மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள்.  

எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். மனவருத்தம் நீங்கும். குடும்பத்தினர் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும். 

பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். கலைத்துறையினருக்கு கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பாராத திருப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு  முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும்.  எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 1, 5, 9

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

{pagination-pagination}


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியதாமதம் நீங்கும். அடுத்த வரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கலாம். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் நடக்கும். விருப்பத்திற்கு ஏற்ற காரியங்கள் நடக்கலாம். மனதில் இருந்து வந்த ரணம் நீங்கும். 

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். அதற்கேற்ற ஊதியமும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக  வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள்.  அனைவரிடமும் அன்பாக பேசி பழகுவது நல்லது. 

பெண்களுக்கு பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் மூலம் நல்ல மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை   படிக்க வேண்டி வரும்.  விளையாட்டு போட்டிகளில் விருதுகள் வாங்க முடியும். 

சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி;

அனுகூலமான திசைகள்: வடக்கு, வடமேற்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 2, 3, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமை அன்று தாயாரை வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

{pagination-pagination}
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

முன்யோசனை இல்லாமல் எதிலும் ஈடுபட்டாலும் சிக்கலில் மாட்டாமல் நழுவிவிடும் சாமர்த்தியம் மிக்க ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில்  வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். 

பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அரசியல்துறையினருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. 

சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: மேற்கு, வடமேற்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 3, 5, 7

பரிகாரம்: சித்தர்களை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். 

{pagination-pagination}
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். 

தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். 

பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். அரசியல்துறையினருக்கு நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி;

அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: ஸ்ரீமஹாகணபதியை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

{pagination-pagination}
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். சுபச்செலவு அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

பெண்களுக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

அனுகூலமான திசைகள்: கிழக்கு, வடக்கு

அதிர்ஷ்டமான எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com