மஹா சிவராத்திரி தினமான இன்று சிவாலயங்களுக்கு செல்லும் சிவபக்தர்கள் தங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம். இன்று என்ன அபிஷேகப் பொருட்கள் வாங்கி கொடுத்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.
1. பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்.
3. தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்.
4. பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்.
5. பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்.
6. நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்.
7. இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு கிட்டும்.
8. சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்.
9. எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு கிட்டும்.
10. சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்.