திருவள்ளூர் அருகில் காக்களூரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டும், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் அனைத்து சந்நதிகளிலும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியன்று இவ்வாலயத்தில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார சேவையும் நடந்தேறியது. இரண்டு தினங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தக்ரள் வந்திருந்து தரிசனம் செய்தவண்ணம் இருந்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நேபாளத்தில் உள்ளது போலவே இவ்வாலயத்தில் ஜலநாராயணர் சந்நதி அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.
தகவல் தொடர்புக்கு: 9443119861, 044 - 27664057
- எஸ்.வெங்கட்ராமன்