திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடிதம் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் என கோயில் இணை ஆணையருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, கோயில் இணை ஆணையர் ஜெகநாதன் கொடுத்த புகாரையடுத்து கோயிலுக்கு கூடுதலாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.