சபரிமலையில் சுத்திகிரியை பூஜைகள் நாளை தொடக்கம்

சபரிமலையில் மகரவிளக்கு முன்னிட்டு சுத்திகிரியை பூஜைகள் நாளை தொடங்குகிறது. 
சபரிமலையில் சுத்திகிரியை பூஜைகள் நாளை தொடக்கம்

சபரிமலையில் மகரவிளக்கு முன்னிட்டு சுத்திகிரியை பூஜைகள் நாளை தொடங்குகிறது. 

ஐயப்பனுக்கு சாத்தப்படும் திருவாபரணம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு நாளை புறப்படுகிறது. மகரஜோதி நாளில் முக்கிய பூஜையான மகர சங்கரம பூஜை நடைபெறும். இதற்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் நாளை தொடங்குகிறது. 

நாளை மாலை தீபாரதனைக்கு பின்னர் பிரசாத சுத்தி பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் உச்சபூஜைக்கு முன்பாக பிம்ப சுக்தி பூஜைகள் நடைபெறும். 

தந்தரி கண்டரு மகேஷ் மோகனரரு தலைமையில் மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் இந்த பூஜைகளை நடத்துவர். மகரவிளக்கு சீசனையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்நிதானத்தில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com