காரமடை அரங்கநாதர் கோயில் மாசிமகத் தேரோட்டத்தில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
காரமடை அரங்கநாதர் கோயிலில் கடந்த 1-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தண்ணீர் சேவையும், பந்த சேவையும், பரிவேட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவின் பத்தாம் நாள் இரவு ஸ்ரீ தேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள் சேஷவாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து தோலம்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். தெப்பத் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.