சென்னை, அபிராமபுரம், ஸ்ரீ சங்கர குருகுலத்தில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் மார்ச் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
நாளது ஸ்வஸ்தி ஹேவிளம்பி மாசி 27 (11.3.2018) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மூலம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண விவாஹ மஹோத்ஸவம் பாகவத ஸம்ப்ரதாயப்படி நடைபெற உள்ளது.
ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதர் மண்டலியினரால் நடத்துவதாக பக்தர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு ஸ்ரீ சங்கர குருகுலத்தில் நடக்க உள்ளது.
அனைவரும் ராதாமாதவ திருக்கல்யாண மஹோத்ஸவத்தில் கலந்துகொண்டு திவ்ய தம்பதிகளின் பரிபூரண அனுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு - விஜயலட்சுமி சந்திரமௌலி 93814 30775, 93809 61682
- எஸ். வெங்கட்ராமன்