ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மாதர் மண்டலியினரால் நடத்தப்படும் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம் இவ்வாண்டு மயிலை அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுல வளாகத்தில் மார்ச் 11-ம் தேதி நடைபெறுகின்றது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்வுகள்..
மார்ச் 9 - மாலை 6.30 - உடையாளூர் டாக்டர் கல்யாண ராமபாகவதர் குழுவினரின்நாமசங்கீர்த்தனம்.
மார்ச் 10 - காலை 10.30 - ஓ.எஸ் சுந்தரபாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜன்.
மாலை 6.30 - ஓ.எஸ் மோகன் ஓ.எஸ் முகுந்தன் பாகவதர், ஸ்ரீராம் நடேசன் குழுவினரின் திவ்யநாம பஜன்.
மார்ச் 11 - காலை 8.30 - ஸ்ரீராதாமாதவ விவாஹ மகோத்சவம் - கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானாந்த மாதர் மண்டலியினர் இணைந்து நடத்துகின்றனர்.
மாலை 6.30 - பக்த சரித்திரம் மற்றும் ஆஞ்சநேய உத்ஸவம் - கடலூர் கோபிபாகவதர் குழுவினர் பங்கேற்கும் நாட்டிய பாவத்துடன் இசை நிகழ்ச்சி (டைகர் ஜெயராம பாகவதர் வேஷம்)
இந்த பாகவத கைங்கரியத்திற்கு பக்தர்கள் உதவி செய்யலாம். மேலும் தகவல்கள் பெற - விஜயலட்சுமி சந்திரமௌலி - 9381430775, 9380961682