• மனிதனுக்கு முக்தி அளிக்க உதவும் செயல்கள் அனைத்திலும் ஆத்மஞானமே மிகவும் சிறந்தது. ஏனெனில் அது ஞானத்துக்குச் சிகரமாகவும் அமரத்துவத்தை அளிப்பதாகவும் இருக்கிறது.
- மனுஸ்மிருதி
• எவன் எந்தப் பிராணியையும் துன்புறுத்துவதில்லையோ, அவன் எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும், எதில் உறுதியான பற்று வைத்தாலும் அவற்றையெல்லாம் முயற்சியில்லாமல் அடைவான்.
- மனுஸ்மிருதி
• ஐம்பூதங்களும் எப்படி உண்மையானவையோ, அது போன்று ஆத்மாவும் உண்மையானது.- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
• இரண்டு கருத்து மோதல்களுக்கும் இடையில் மனசாட்சிக்கு வளைந்து கொடுப்பவன்தான் உலகின் முன்பு நீதிமானாக உயர்ந்து நிற்க முடியும்.
- வேதவாக்கு
• இறைவனே எல்லாப் பிராணிகளிடமும் நான் அன்பாக இருக்கவும், அவைகளும் என்னிடம் அன்பாக இருக்கவும் அருள் செய்யும்படி உன்னிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
- யஜுர் வேதம்
• கல்வியில் சிறந்தவன் வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் முதியவனே என்று தேவதைகள் கூறுகின்றனர்.
- மனுஸ்மிருதி
தொகுப்பு - சுவாமி கமலாத்மானந்தர்