பொன்மொழிகள்!

மனிதனுக்கு முக்தி அளிக்க உதவும் செயல்கள் அனைத்திலும் ஆத்மஞானமே மிகவும் சிறந்தது.
பொன்மொழிகள்!

• மனிதனுக்கு முக்தி அளிக்க உதவும் செயல்கள் அனைத்திலும் ஆத்மஞானமே மிகவும் சிறந்தது. ஏனெனில் அது ஞானத்துக்குச் சிகரமாகவும் அமரத்துவத்தை அளிப்பதாகவும் இருக்கிறது.

- மனுஸ்மிருதி

• எவன் எந்தப் பிராணியையும் துன்புறுத்துவதில்லையோ, அவன் எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும், எதில் உறுதியான பற்று வைத்தாலும் அவற்றையெல்லாம் முயற்சியில்லாமல் அடைவான்.

- மனுஸ்மிருதி

• ஐம்பூதங்களும் எப்படி உண்மையானவையோ, அது போன்று ஆத்மாவும் உண்மையானது.- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி

• இரண்டு கருத்து மோதல்களுக்கும் இடையில் மனசாட்சிக்கு வளைந்து கொடுப்பவன்தான் உலகின் முன்பு நீதிமானாக உயர்ந்து நிற்க முடியும்.

- வேதவாக்கு

• இறைவனே எல்லாப் பிராணிகளிடமும் நான் அன்பாக இருக்கவும், அவைகளும் என்னிடம் அன்பாக இருக்கவும் அருள் செய்யும்படி உன்னிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

- யஜுர் வேதம்

• கல்வியில் சிறந்தவன் வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் முதியவனே என்று தேவதைகள் கூறுகின்றனர்.

- மனுஸ்மிருதி

தொகுப்பு - சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com