நிகழ்வுகள்
தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா
தாம்பரத்தை அடுத்த படப்பைக்கு அருகில் ஆத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள அருட்ஜோதிபுரம்
தாம்பரத்தை அடுத்த படப்பைக்கு அருகில் ஆத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள அருட்ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா பிப் 8,9 தேதிகளில் நடைபெறுகின்றது. பிப் 8-ம் தேதி காலை 6 மணிக்கு சுத்த சன்மார்க்க கொடி கட்டி நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று அருட்பெருந்ஜோதி அகவல் பாராயணம், கருத்தரங்கம், சன்மார்க்க ஊர்வலம், நலத்திட்டம் வழங்குதல், கருத்தாக்கம் போன்றவை நடைபெறுகின்றன. பிப் 9-ஆம் தேதி வியாழனன்று மூன்று வேளைகளில் 7 திரைநோக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
நேரம் – காலை 6.30 மணி, பகல் 1.00 மணி, இரவு 8 மணி
தொடர்ந்து 17-ம் ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளைப் பெறுமாரு சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
மேலும் தகவல்களுக்கு – இரா.பாலகிருஷ்ணன் 9962569966