காஞ்சி மாவட்டம், உத்திரமேரூர் தலத்திற்கு மேற்கே அமைந்துள்ளது அம்மையப்ப நல்லூர் கிராமம். இங்கு பாகவதோத்மர்கள் வழிபட்ட மிகப் பழைமையான ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் சுமார் 30 ஆண்டுகளாக போற்றி பாதுகாக்க வழியின்றி மிகவும் சிதிலமடைந்துள்ளது. நித்ய திருவாராதனங்களும் குறைந்த நிலையில் கிராம மக்கள் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கைங்கர்ய அறக்கட்டளை என்ற ஆன்மிக அமைப்பை நிறுவி, முறைப்படி பதிவு செய்து. திருக்கோயிலின் புனரமைப்பு கட்டுமான திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். இரண்டு நிலை விமானத்துடன் பெருமாள் சந்நிதி உட்பட பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டியுள்ளது. மகா சம்ப்ரோக்ஷணம் பலவருடங்களாக நடைபெறவில்லை. திருமால் அடியார்கள் அவசியம் உதவிட வேண்டும்.
தொடர்புக்கு : ஜி. ஸ்ரீதர் - 98435 87687 / 97875 13949.