பன்னிரு திருமுறை இசைவிழா!

எல்லாம் வல்ல சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளியது வேதம். அதன் சாரமாக விளங்குவது பன்னிரு திருமுறைகள்
பன்னிரு திருமுறை இசைவிழா!

எல்லாம் வல்ல சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளியது வேதம். அதன் சாரமாக விளங்குவது பன்னிரு திருமுறைகள். அவை, சிவபெருமானே சைவ சமயாசாரியார்கள் திருவுள்ளத்திலிருந்து ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு பாட்டுவித்த அருளிசைப்பாடல்கள். இவை, இயல் பாடல்களாகவும் இசைப்பாடல்களாகவும் அமைந்துள்ளன. இவ்வரிய செந்தமிழ்ப் பாடல்களின் இசை இன்பத்தையும், பொருள் இன்பத்தையும் மக்கள் கேட்டு இன்புறவும், வருங்கால இளம் சந்ததியினர் இதனை ஏற்றுப் போற்றிப் பாதுகாக்கும் பொருட்டும், அரனருள், தனது பதினான்காம் ஆண்டு பன்னிரு திருமுறை இசைவிழாவினை, வரும் 12.03.2017 முதல் 23.03.2017 முடிய பன்னிரண்டு தினங்கள் காலை 10-00 மணி முதல் இரவு 7.30 வரை சிறப்புற நிகழ்த்த உள்ளது.

இடம் – தருமபுரம் ஆதினம் சமயப் பிரசார நிலையம், 158 வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை

தொடர்புக்கு – 9444156335, 23782333 மெயில் – arunarul@yahoo.co.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com