கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே மேலக்கடம்பூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மார்ச் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நடைபெற உள்ளது.
அதாவது, இந்த மூன்று நாள்களிலும் சுவாமி அமிர்தகடேஸ்வரர் மீது சூரியக் கதிர்கள் சரியாக காலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை விழும். இது, அமிர்தகடேஸ்வரரை சூரிய பகவான் பூஜிப்பதுபோல் இருக்கும்.
அன்பர்கள், திரளாக வந்திருந்து இந்தப் பூஜையைக் கண்டுகளிக்கும்படி ஆலயக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.