திருத்தேரில் பத்மாவதி தாயார் பவனி

திருச்சானூரில் பத்மாவதி தாயார் சனிக்கிழமை திருத்தேரில் பவனி வந்தார்.
திருச்சானூரில் நடந்த திருத்தேர் பவனி. (உள்படம்) பத்மாவதி தாயார்.
திருச்சானூரில் நடந்த திருத்தேர் பவனி. (உள்படம்) பத்மாவதி தாயார்.

திருச்சானூரில் பத்மாவதி தாயார் சனிக்கிழமை திருத்தேரில் பவனி வந்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
இதன் எட்டாம் நாளான சனிக்கிழமை பத்மாவதி தாயார் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு தாயாருக்கு ஆஸ்தான மண்டபத்தில் மூலிகை கலந்த வெந்நீரால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலையில் சகஸ்ர தீபாலங்கார மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து, குதிரை வாகனத்தில் தாயார் மாட வீதியில் வலம் வந்தார். வாகன சேவையின் முன்னும், பின்னும் இந்து தர்ம பரிக்ஷித் அமைப்பினர் நடனம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com