திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாத நடைதிறப்பு நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாத நடைதிறப்பு நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் தா.வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ் மாதமான மார்கழி (டிச.16) வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13-இல் நிறைவு பெறுகிறது. இந்த மாதத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6-7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7.00 மணிக்குள் இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00-8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
முக்கிய விழா நாள்களான ஜனவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு, கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 11ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 14ஆம் தேதி சனிக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கும் திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com