கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் கார்த்திகை மாத ஜோதி தரிசனம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும், பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாத பூச நட்சத்திரத்தையொட்டி சனிக்கிழமை இரவு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை தரும சாலையில் திருஅருட்பா முற்றோதல், அகவல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். பின்னர் இரவு 7.45 மணியளவில் திருஅறையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.