திருமலையில் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுவதைத் தடுக்க தேவஸ்தானம் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்க உள்ளது. இதில், முதல்கட்டமாக சோதனை அளவில் 2 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், விரைவில் திருமலையில் பேட்டரியால் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.