தாம்பரத்தை அடுத்துள்ள திருவேங்கடப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோத்சவம்!

தாம்பரத்தை அடுத்து வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து கேளம்பாக்கம்  செல்லும் சாலையில் 7 கி.மீ தூரத்தில் ரத்தினமங்கலத்தை அடுத்துள்ளது...
தாம்பரத்தை அடுத்துள்ள திருவேங்கடப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோத்சவம்!

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்து வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து கேளம்பாக்கம்  செல்லும் சாலையில் 7 கி.மீ தூரத்தில் ரத்தினமங்கலத்தை அடுத்துள்ளது வேங்கடமங்கலம் கிராமம். இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பு நிலத்தில் மிகப்பபெரிய புஷ்கரணியுடன் (குளம்) சமீப காலத்தில் உருவாகியுள்ளது திருவேங்கடப்பெருமாள் திருக்கோயில்.

இங்கே சுமார் 7 அடி உயரத்தில் அதி அற்புத கோலத்தில் சேவை தருகின்றார் திருவேங்கடவன். இவ்வாலயத்தில் முதலாமாண்டு பிரதிஷ்டா தின பூர்த்தியை முன்னிட்டு ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண மகோத்சவம் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று ஆகமவிதிப்படி சாஸ்தோத்தரமாய் நடைபெறுகிறது.

நடைபெறும் நிகழ்ச்சிகள்:

திருக்கல்யாண மகோத்சவம்  - காலை 9 மணி முதல்

உற்சவர் திரு வீதியுலா மற்றும் பஜனை - மாலை 5 மணி

இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என திருவேங்கடப்பெருமாள் ஆலய திருப்பணி சங்கம் கேட்டுக் கொள்கிறது.  இத்திருத்தலத்திற்கு தாம்பரத்திலிருந்து 51A , 55C எண் கொண்ட பேருந்துகளும் தி.நகரிலிருந்து J 51 எண் பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும் தகவல்களுக்கு: 9382727555 / 9444622695 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com