ஊத்துக்கோட்டை பெருமாள் கோயிலில் ஏப்.29-இல் லட்சார்ச்சனை விழா

ஊத்துக்கோட்டை அழகிய சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில், வரும் 29-ஆம் தேதி லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.

ஊத்துக்கோட்டை அழகிய சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில், வரும் 29-ஆம் தேதி லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டை பிராமணத் தெருவில் சுந்தரவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழைமைவாய்ந்த இக்கோயிலில், சித்திரை மாத லட்சார்ச்சனை விஷேசமானது. இந்த ஆண்டில் வரும் 28-ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருமஞ்சனமும், மறுநாளான சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகின்றன. அன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், அதைத்தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com