காஞ்சிபுரம் அஷ்டபுஜம் வீரண்ணன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி வியாழக்கிழமை காலை முதல் யாகசாலை பூஜைகள், மகா சங்கல்பம், மகா பூர்ணாஹுதி, வாஸ்து பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.