மதுராந்தகத்தை அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாம்பிகை சமேத அருணாதீஸ்வரர் கோயிலில் ஆடி மாதத் திருவிழாவை முன்னிட்டு, ஜேஸ்டா தேவி சந்நிதியில் வெள்ளிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இக்கோயில் சூரிய பகவானால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம் என்பது குறிப்பிடத் தக்கது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.