சூரிய பிரபை வாகனத்தில் கபிலேஸ்வரர் வீதியுலா

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை உற்சவ மூர்த்திகளான காமாட்சி அம்மன், கபிலேஸ்வரர் சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்த உற்சவமூர்த்திகள்.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்த உற்சவமூர்த்திகள்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை உற்சவ மூர்த்திகளான காமாட்சி அம்மன், கபிலேஸ்வரர் சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர் மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், விபூதி, சந்தனம், பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் சோமஸ்கந்த மூர்த்தி மற்றும் காமாட்சி அம்மன் பவனி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாகன சேவையின்போது கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com