திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை உற்சவர் அதிகாரநந்தி வாகனத்தில் வலம் வந்தார்.
திருப்பதியில் கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை கபிலேஸ்வரர் அதிகாரநந்தி வாகனத்தில் வலம் வந்தார்.
பின்னர், காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு பலவகையான அபிஷேக திரவியங்களைப் பயன்படுத்தி அபிஷேகம் நடைபெற்றது. மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பல்லக்கு வாகனத்தில் உற்சவர் வலம் வந்தார். வாகன சேவையின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.