வேலூர் ஸ்ரீநாராயணி பீடத்தில் பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்காக மேதா சூக்த யாகம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறுகிறது.
இதுகுறித்து நாராயணி பீடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
வித்யாநேத்ரம் திட்டத்தின் கீழ் பத்தாம், பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியர் வெற்றி வெற, ஸ்ரீ மேதா சூக்த யாகம் எனும் சரஸ்வதி யாகம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட எழுதுகோல் (பேனா) சக்தி அம்மாவால் வழங்கப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.