மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீலிங்கோத்பவமூர்த்திக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 12.10 மணி வரை லிங்கோத்பவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 12.20 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. லிங்கோத்பவமூர்த்திக்கு தாழம்பூவை வைத்து செய்யப்பட்ட அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து, இரவு முழுவதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தனர்.