அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் விழா

மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் நிகழ்ச்சியையொட்டி, சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் நிகழ்ச்சியையொட்டி, சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன்.

மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 3 மணியளவில் கோயிலின் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
கோயிலின் கருவறை முதல் ஆயிரங்கால் மண்டபம் வரை உள்ள 5 நந்தி பகவானுக்கும் காய்கனிகள், பல்வேறு உணவு வகைகளைக் கொண்டு மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவூடல் நிகழ்ச்சியையொட்டி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 பேரும் ஒரு பாத நிலையில்
5 நந்திகளுக்கும், சூரிய பகவானுக்கும், தேவர்களுக்கும் காட்சியளிக்கும் ஏகபாத திருமூர்த்தி தரிசனம் நடைபெற்றது.
இதையடுத்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, கோயிலின் திட்டிவாயில் படியில் சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். பின்னர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மாட வீதிகளில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து 3 முறை பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவரூபத்தினை விளக்கும் விதமாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6 மணியளவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சூரிய பகவானுக்கு காட்சியளிக்கும் ஏகபாத திருமூர்த்தி தரிசனத்திலும், மற்ற நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com