மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜனவரி 28-ஆம் தேதி சனிக்கிழமை 6-ஆவது ஸ்ரீமத் பாகவத நவஹ சத்ரம் தொடங்குகிறது.
ஸ்ரீமத் பாகவத நவஹ சத்ரத்தை பிரம்மஸ்ரீ தோட்டம் ஷ்யாம் நம்பூதிரி தலைமையில் காலடி சங்கரநாராயணன் நம்பூதிரியும், கொன்னம்பில்லி ஸ்ரீராம் நம்பூதிரியும் ஸ்ரீமத் பாகவத மூலபாரயணம் செய்கிறார்கள்.
ஜனவரி 28 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் பாகவதம் தொடக்க விழா நடைபெறுகிறது. 29 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை டாக்டர் சுதா சேஷய்யன் வராஹ அவதாரம் சொற்பொழி நிகழ்த்துகிறார்.
தினந்தோறும் ஏ.கே.பாலகிருஷ்ண பிஷா ரெட்டி, சோபனா ரவீந்திரன், வயப்பிரம் வாசுதேவ பிரசாத், ஸ்வாமி ஹரி நாராயண நம்பூதிரி, குருவாயூர் ராதா அம்பத், ஈரோடு பாலாஜி பாகவதர், கொன்னம்பில்லி ஸ்ரீராம் நம்பூதிரி, குருஜி கோபாலவள்ளி தசர், குருவள்ளூர் ஹரி நம்பூதிரி, திகிடம் நாகராஜன் நம்பூதிரி. கள்ளம் வள்ளி ஜெயம் நம்பூதிரி, கண்டமங்களம் பரமேஸ்வரன், மடசேரி நீலகண்டன் நம்பூதிரி, புத்திலம் மது நம்பூதிரி உள்ளிட்டோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.
பிப்ரவரி 5 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிவரை 9 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.