காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை
ஈச்சம்பட்டு கோயிலில் நடந்த கும்பாபிஷேகம்.
ஈச்சம்பட்டு கோயிலில் நடந்த கும்பாபிஷேகம்.

ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாக சாலை பூஜைகள் தொடங்கியது.
திங்கள்கிழமை கோயில் கோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com