திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு முன்னாள் எம்.பி. லகடபாட்டி ராஜகோபால் 235 கிராம் எடையுள்ள தங்க ஆரத்தை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கினார்.
ரூ.7.7 லட்சம் மதிப்புடைய இந்த தங்க ஆரத்தில் முத்து, மாணிக்கம், பவளம், மரகதம் உள்ளிட்ட கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதனை அவர் கோயில் அதிகாரி முனிரத்னம் ரெட்டியிடம் ஒப்படைத்தார். அப்போது, விசேஷ நாள்களில் இந்த தங்க ஆரம், தாயாருக்கு அணிவிக்கப்படும் என கோயில் அதிகாரி தெரிவித்தார்.