சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் ஜூன் 21-இல் தொடக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
உற்சவ விவரம் வருமாறு:
ஜூன் 22-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, 23-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 24-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 25-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்), 26-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 27-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும், 28-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
30-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூலை 1-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com