ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
காலை 8.45 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து மதியம் ஒரு மணியளவில் நிலையை அடைந்தது.