செங்கல்பட்டை அடுத்த நம்பர் 216 அம்மணம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிவன் - பார்வதிக்கு திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர், யாகம் வளர்த்து திருக்கல்யாணத்துக்கான பட்டு வஸ்திரம், பலவகையான பழங்கள், மலர்கள், பட்சணங்கள், சீர்வரிசையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. செங்கல்பட்டு, சென்னை, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு மாங்கல்யம், வளையல் உள்ளிட்ட பிரசாதமும், அன்ன தானமும் வழங்கப்பட்டது.