சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

செங்கல்பட்டை அடுத்த நம்பர் 216 அம்மணம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிவன் - பார்வதிக்கு திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு அம்மணம்பாக்கம் சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த உற்சவர்கள் சிவன் - பார்வதி.
செங்கல்பட்டு அம்மணம்பாக்கம் சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த உற்சவர்கள் சிவன் - பார்வதி.

செங்கல்பட்டை அடுத்த நம்பர் 216 அம்மணம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிவன் - பார்வதிக்கு திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர், யாகம் வளர்த்து திருக்கல்யாணத்துக்கான பட்டு வஸ்திரம், பலவகையான பழங்கள், மலர்கள், பட்சணங்கள், சீர்வரிசையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. செங்கல்பட்டு, சென்னை, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு மாங்கல்யம், வளையல் உள்ளிட்ட பிரசாதமும், அன்ன தானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com