ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.47 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.47 கோடி வசூலானது.
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.47 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.47 கோடி வசூலானது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். அதன்படி சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 2.47 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
99,487 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 99,487 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 41,503 பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். திங்கள்கிழமை காலை நிலவரப்படி தர்ம தரிசன பக்தர்கள் 22 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் 12 அறைகளிலும் ஏழுமலையானைத் தரிசிக்கக் காத்திருந்தனர். தர்ம தரிசன பக்தர்களுக்கு 10 மணி நேரமும், நடைபாதை பக்தர்களுக்கு 6 மணிநேரமும் ஆனது.
ரூ. 3.3 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தினசரி நன்கொடை அளித்து வருகின்றனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 2.3 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 3.3 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com