சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன உற்சவக் கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் புதன்கிழமை (ஜூன் 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன உற்சவக் கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் புதன்கிழமை (ஜூன் 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த நிகழ்வில், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றிருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி, ஆவாஹணம் செய்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் து.தி.ஆபத்சகாய தீட்சிதர் கொடியேற்றிவைக்கிறார்.
உற்சவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. ஜூன் 29-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறும்.
ஜூன் 30-ஆம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும்.
ஜூலை 1-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் ச.ராஜகணபதி தீட்சிதர், துணைச் செயலர் என்.ஆர்.சண்முக தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com