சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்டர் கோயிலில் ஆனிமாதத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட சாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி மாதத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பணிவிடை உகப்படிப்பு, பகல் பணிவிடை உச்சிபிடிப்பு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக அய்யாவின் திருநடையில் தர்ம பெட்டக பரிவர்த்தனை நடைபெற்றது. மாலையில் அய்யா வைகுண்டர் தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்தார்.
இரவு சீதா.மனோன்மணி அன்பு, கலந்து கொண்ட அய்யாவின் பரம் பொருள் பற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. விழாயை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, கோயில் நிர்வாகி தங்கபெருமாள், தங்கப்பழம், எம்.சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.