சீனிவாச மங்காபுரத்தில் 24-இல் புஷ்பயாகம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் 24-ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெறுகிறது.
சீனிவாச மங்காபுரத்தில் 24-இல் புஷ்பயாகம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் 24-ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் 24-ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெறுகிறது.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் அமைந்துள்ளது கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில். இங்கு கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதன்பின்னர் கோயிலில் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை உற்சவமூர்த்திக்கு புஷ்பயாகம் நடைபெற உள்ளது.
இதற்காக கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 7 டன் மலர்கள் தருவிக்கப்பட உள்ளன. இந்த புஷ்ப யாகத்தில் கலந்து கொள்ள விரும்பும் தம்பதிகள் ரூ. 516 செலுத்தி பங்கேற்லாம். இதையொட்டி அன்றைய தினம் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com