தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள பைரவர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊத்துக்கோட்டையை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் பழைமைவாய்ந்த மகா கால பைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திங்கள்கிழமை மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.