திருப்பதியில் படி உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் படி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அன்னமாச்சார்யாரின் உருவச் சிலையை வைத்து படிகளுக்கு சிறப்பு பூஜை செய்த பக்தர்கள்.
அன்னமாச்சார்யாரின் உருவச் சிலையை வைத்து படிகளுக்கு சிறப்பு பூஜை செய்த பக்தர்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் படி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆந்திர கவி அன்னமாச்சார்யாரின் 514-வது நினைவு தினத்தையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பரிக்ஷித் தலைமையில், திருப்பதியில் வியாழக்கிழமை படி உற்சவம் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று காலை 5 மணிக்கு அன்னமாச்சார்யாரின் கீர்த்தனைகளைப் பாடி பஜனை செய்தனர்.
மேலும், கோலாட்டம் ஆடியபடி திருப்பதியிலிருந்து அலிபிரி நடைபாதை மார்க்கத்தில் உள்ள பாதாள மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்து வணங்கியபடி திருமலைக்கு புறப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசித்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com