அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி மாத பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி மாத பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் அருளப் பெற்றதும், இரு கருவறைகளை கொண்டு ஆட்சீஸ்வரர் அருளாட்சி புரிவதும் திருத்தொண்ட
மண்டலத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாகத் திகழ்வது அச்சிறுப்பாக்கம் அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர்
திருக்கோயில். இங்கு வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை கோயில் வளாகத்தில் கருவறை முன்புறம் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ரிஷப வாகனத்தில் உற்சவர்மூர்த்திகள் இளங்கிளியம்மன் சமேத ஆட்சீஸ்வரர் உட்பிரகார உலா வந்தருளினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com