குடியாத்தம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குடியாத்தத்தை அடுத்த ஐதர்புரத்தில் புதன்கிழமை கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.