திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
கத்திரி வெயில் நிறைவடைந்ததையொட்டி, திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மேலும், வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதையொட்டி, திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கோயிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திருவள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.