ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் நவ.17 முதல் மண்டல பூஜை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் வரும் 17-ஆம் தேதி மண்டல பூஜைத் திருவிழா தொடங்குகிறது.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் நவ.17 முதல் மண்டல பூஜை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் வரும் 17-ஆம் தேதி மண்டல பூஜைத் திருவிழா தொடங்குகிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் வரும் நவ.17-ஆம் தேதி முதல் டிச.27-ஆம் தேதி வரை 41 நாள்கள் நடைபெறும் மண்டல சிறப்பு பூஜைத் திருவிழாவில் நாள்தோறும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
விரதமிருந்து இரு முடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் 18-ஆம் படி ஏறி ஐயப்பனுக்கு காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யலாம். மண்டல பூஜைக் காலத்தில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். தினமும் மாலையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
மண்டல பூஜையின் முதல் நாள் நவ.17 முதல் டிச.13-ஆம் தேதி வரை 27 தினங்கள் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com