பத்மாவதி தாயார் கோயலில் வருடாந்திர பிரம்மோற்சவம்: நவ.15-இல் தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
பத்மாவதி தாயார் கோயலில் வருடாந்திர பிரம்மோற்சவம்: நவ.15-இல் தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
 திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறுவது போல் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தேவஸ்தானம் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை திருச்சானூரில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
 இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்துக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் திருச்சானூரில் நடந்து வருகிறது.
 பிரம்மோற்சவ அட்டவணை
 தேதி காலை மாலை, இரவு
 15 - கொடியேற்றம் சின்னசேஷ வாகனம்
 16 - பெரிய சேஷ வாகனம் அன்னப்பறவை
 17 - முத்துப்பந்தல் சிம்ம வாகனம்
 18 - கல்பவிருட்சம் அனுமந்த வாகனம்
 19 - பல்லக்கு சேவை வசந்தோற்சவம், யானை வாகனம்
 20 - சர்வபூபால வாகனம் தங்கதேர், கருடசேவை
 21 - சூர்யபிரபை சந்திரபிரபை
 22 - திருத்தேர் குதிரை வாகனம்
 23 - பஞ்சமிதீர்த்தம் கொடியிறக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com