திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.81 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 1.81 கோடி வசூலானது.
ரூ. 18 லட்சம் நன்கொடை
தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள சனிக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 13 லட்சம், கல்விதானம் அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. . 3 லட்சம் என மொத்தம் ரூ. 18 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.