தாயாருக்கு ஏழுமலையானின் திருப்பாதங்கள் அணிவிப்பு

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு அணிவிக்க ஏழுமலையானின் திருப்பாதங்கள் திருமலையிலிருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.
தாயாருக்கு ஏழுமலையானின் திருப்பாதங்கள் அணிவிப்பு

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு அணிவிக்க ஏழுமலையானின் திருப்பாதங்கள் திருமலையிலிருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.
 திருச்சானூரில் தாயாருக்கு நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 6}ஆம் நாள் இரவு கருடசேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை 6}ஆம் நாளை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
 கருட வாகனத்தில் வலம் வரும் பத்மாவதி தாயாருக்கு அணிவிக்க ஏழுமலையான் திருப்பாதங்கள் திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டன.
 திருமலையிலிருந்து பட்டாச்சாரியார்கள் தங்க திருப்பாதங்களை மூங்கில் குடையில் வைத்து அதற்கு மலர்மாலை அணிவித்து ஊர்வலமாக திருச்சானூரில் உள்ள பசுப்பு மண்டபத்துக்கு கொண்டு வந்தனர். பசுப்பு மண்டபம் அருகில் ஏழுமலையானின் பாதங்களுக்கு திருச்சானூர் கோயில் அதிகாரிகள் மரியாதை செய்து அவற்றை யானை மீது வைத்து எடுத்துச் சென்றனர். திருப்பாதங்கள் வரும் வழியில் பக்தர்கள் அதற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com