திரிசக்தி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருப்போரூர் வட்டம், நாவலூரை அடுத்த தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் புதன்கிழமை நவராத்திரி விழா தொடங்கியது.
தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு.
தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு.

திருப்போரூர் வட்டம், நாவலூரை அடுத்த தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் புதன்கிழமை நவராத்திரி விழா தொடங்கியது.
தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்கியது. 
நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. மேலும் கோயிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. விழா நாள்களில் நாள்தோறும் முப்பெரும் தேவியர்களும் அலங்கரிக்கப்பட்டு கொலுவில் வீற்றிருப்பர். மேலும் ஆன்மிக சொற்பொழிவு, இசைக் கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் கே.கே.கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com