விளம்பி வருடத்தில் யோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்?

12 ராசிக்காரர்களுக்குமான 2018 விளம்பி வருட  தமிழ்ப் புத்தாண்டு பலன்களை  தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்
விளம்பி வருடத்தில் யோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்?

12 ராசிக்காரர்களுக்குமான 2018 விளம்பி வருட  தமிழ்ப் புத்தாண்டு பலன்களை  தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாங்களில் உங்கள் பெயர் புகழ் உயர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை கூடக் காண்பீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் பேரக்குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மந்தமாக இருந்த குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவார்கள். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்களால் எதிர்பாராத செலவினங்களும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்காக சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும். அதேநேரம் இந்த பயணம் சுபகாரியங்களுக்காக நிகழும் என்பதால் மனதில் மகிழ்ச்சிக்குக் குறைவராது. மேலும் சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபட்டு பிரபலமடையும் யோகமும் உண்டாக பாக்கியமுள்ளது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவீர்கள். செய்தொழிலில் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சற்று விலகி இருந்தாலும் விட்டுக்கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள். முக்கிய தருணங்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். வெளியூரிலிருந்து அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும். குறிப்பாக, இது குழந்கைளுக்கு நன்மையாக அமையும். வெளியூர் சென்று செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். மேலும் சில நேரங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்கமாலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டமும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கடன்கள் வசூலாவதற்குத் தாமதமாகும். அதனால் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே தெரியும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். இக்காலத்தில் நீர்வரத்தும் மிகக்குறைவாக இருப்பதால் பாசன வசதிகளுக்காக சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடிவரும். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் கவனிக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உங்கள் செயல்களில் உங்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் விரிசல்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களும் எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். மேலும் செய்தொழிலில் புதகிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வெளியில் சொல்ல முடியாத உடல் உபாதைகளிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். அசையா சொத்துக்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் சாதகமான தீர்ப்பை நோக்கிச் செல்லும். நெடுநாளாக விலகியிருந்த உற்றார் உறவினர்கள் மறுபடியும் குடும்பத்ததுடன் இணைவார்கள். 

உங்களின் புதிய செயல்களுக்கு புதிய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மேலும் சமூகத்தில் பிரபலமானவர்களும் நண்பர்களாவார்கள். வீடு மாற்றம் செய்ய நினைத்தவர்கள் இந்த காலகட்டத்தில் அதை செய்யலாம். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் புதிய ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். பணவரவு சரளமாக இருப்பதால் தர்மகாரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். பொதுச் சேவையில் முன்னேற்றங்கûள் உண்டாகலாம். அலைந்து திரிந்து செய்த காரியங்கள் சுலபமாக முடிவடையும். மற்றபடி அதிகமாக முயற்சி செய்யமலேயே சுகங்கள் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்கள் அனைத்தும் ராஜபாட்டையில் செல்ல விசா எதிர்பார்க்கின்றவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு பயணிப்பார்கள். பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோருகளுக்கிடையே ஏற்பட்ட சிற்சில பிரச்னைகள் தானாகவே தீந்துவிடும். அதேநேரம் அனைவரிடமும் நிதானமாக பேசிப்பழகுவீர்கள். இதனால் உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து சமுதாயத்தில் கூடத் தொடங்கும். உங்கள் செயல்களில் விழிப்புடன் இருந்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா செய்யவும். நெடு நாளாக ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள், பொருளாதாரத்தில் பற்றாக்குறை என்று எதுவும் ஏற்படாமல் இருக்கும் காலகட்டமாக இது அமையும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலை குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கும். தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். அனைத்துச் செயல்களும் தடைகளுக்குப்பிறகே வெற்றியைக் கொடுக்கும். 

வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் பெரிய கடன்கள் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். வியாபாரிகளுக்கு கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். தரமிக்க விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். உபரி வருமானங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சிமேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு செய்யும் விடாமுயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்சதங்கள் கிடைக்கும். ஆனாலும் உங்களை குறைசொல்லும் சக கலைஞர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். பணியில் கவனம் செலுத்தவும். 

பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுற்றுலா சென்று மன மகிழ்ச்சியைக் கூட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். பிள்ளைகளாலும் சந்தோஷம் நிறையும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து காணப்படும். மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும் பெற்றோர்கள் தேவையான ஆதரவைத் தருவார்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள். 

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு சிறப்புகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை படிப்படியாக உயரத்தொடங்கும். முக்கியமான விஷயங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோரை விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் போட்டியாளர்கள் அடங்கியே இருப்பார்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிய தூரப்பயணங்களை அடிக்கடி செய்ய வேண்டி வரும். பொருளாதாரம் சிறப்பாகவே செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். 

சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடி வரும். அரசாங்கத்திடமிருந்து, கெடுபிடிகள் என்று எதுவும் ஏற்படாது. அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அவசரப்பட்டு முன்யோசனையின்றி எவரிடமும் பேசவேண்டாம். மேலும் இந்த காலகட்டத்தில் தற்பெருமை கூடாது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவினங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும். இதுவரை விலை போகாமலிருந்த மண் மனைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகும். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அநாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். இதனால் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். மற்றபடி மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். விருந்து கேளிக்கைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சோம்பலுக்கு இடம்தர கூடாது. வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வளர்ந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த ஆண்டு கொஞ்சம் நலம் தரும் திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்கு தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்படும் ஆற்றலும் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர் புகழ் கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். ரசிகர்கள் உங்களை அலட்சியப் படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இதனால் சுப விரயங்கள் உண்டாகும். 

கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளுவார்கள். கணவரும் உங்களை மதித்து நடத்துவார். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். உடல்நலம் பலப்படும்.

பரிகாரம்: துர்க்கையையும் நவக்கிரகங்களையும் பிரதட்சணம் செய்யுங்கள்.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பம்போல் செய்தொழிலை மாற்றியமைப்பீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். சிலர் செய்தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவார்கள். குழந்தைகளின் கல்விக்காக மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள். அவர்களால் குடும்பத்தின் அந்தஸ்து உயரும். பணவரவு எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே வரும். இல்லத்தில் சந்தான பாக்கியம் உண்டாகும் தீர்க்கமாக சிந்தித்து சிறப்பாக முடிவெடுப்பீர்கள். 

உங்கள் முயற்சிகள் எதுவும் வீண் போகாது. சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய நவீன வாகனங்களை வாங்குவார்கள். நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் இணைந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் எண்ணங்களை செய்தொழிலில் நடைமுறைப்படுத்துவீர்கள். அதனால் உண்டாகும் நற்பலன்களை கண்கூடாகவும் பார்ப்பீர்கள். கைவசம் உள்ள பொருள்களை செம்மைப்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சிறிது பகைமை, விரோதம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எவரிடமும் எதிர்வாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து மாற்றங்கள் உண்டாகி அதன்வழியே நல்ல செல்வம், செல்வாக்கு ஆகியவை பெறுவதற்கு வழி உண்டாகும். நெடுநாளாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொண்டவர்கள் சுயமாக செயல்படத் தொடங்குவார்கள். தாமாகவே நல்ல முடிவுகள் எடுத்து சிறப்பாக வெற்றிபெறுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுலபமாக நடந்தேறிவிடும். மனதிற்கினிய பிரயாணங்களைச் செய்து அதன்மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இல்லத்தில் முத்தான புத்திரப் பேறு உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவதற்கும் புனிதமான தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதற்கும் தகுந்த காலகட்டமாக அமைகிறது. வெளிநாடு சென்று வர முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைத்துவிடும். உங்களின் உள் உணர்வு சிறப்பாக வேலைசெய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். மேலும் உடலில் சிறிது சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபங்கள் வரும். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்பிவராமல் தங்கிவிட நேருமாகையால் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, கால்நடை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப் படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல்ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். உடல்சோர்வும் சில நேரங்களில் உண்டாகும். மாணவமணிகள் பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்படையுங்கள்.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சொல்லுமளவுக்கு லாபங்கள் கிடைக்கும். செய்தொழில் கணிசமாக விருத்தியடையும். பெற்றோர்களுடன் இணக்கமாக நடந்துகொண்டு அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வழக்கு விஷயங்கள் அனுகூலமான திருப்பங்களை சென்றடையும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்கள் சிறிது விரயமாகும் காலமிது. செலவுகள் செய்யும் நேரத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உற்றார், உறவினர்களுடன் சுமுகமான தொடர்பை வைத்துக்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம் மேம்பட  யோகா, பிராணாயாமம் செய்யவும்.  எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேருவீர்கள். பழைய தொழிலில் ஆதாயம் இல்லை என்று கருதி புதிய தொழிலையும் தொடங்குவீர்கள். திடீரென்று மகிழ்ச்சி தரும் உல்லாசப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரத்தையும் போடுவீர்கள். கடன்கள் அனைத்தையும் படிப்படியாக அடைத்து விடுவீர்கள். சிலருக்கு பங்குவர்த்தகத்தின் மூலமும் சிறிது கூடுதல் வருமானம் கிடைக்கும்.  உங்களுக்குக்கீழ் வேலைப் பார்ப்பவர்களுடன் உறவு சீராகவே தொடரும். குடும்பத்தில் முயற்சியின் பேரில் சுப காரியப் பேச்சுவார்த்தைகள் கூடிவரும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எண்ணிய எண்ணங்களும் போடும் திட்டங்களும் கூட சில சமயம் நடைபெறவில்லை என்றாலும் சில நாள்கள் கழித்து பலன் தரக்கூடியதாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை சிறிது சிரமத்தின்பேரில் வாங்குவீர்கள். சுய கௌரவத்திற்காக மற்றவர்களை ஏவி காரிய சாதனை செய்து வந்த நீங்கள் தற்சமயம் தாமாகவே நேர்முகமாக காரியத்தில் காலடி எடுத்து வைத்து மாறுதலைச் சந்திப்பீர்கள். 

வண்டி வாகனங்களுக்குப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். எந்த விஷயத்திலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தேக ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டி வரும். கண், தோல், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தைரியம் துணிவு இப்பொழுது சரிபாதிக்குமேல் குறைந்துவிட்டது போல் தோன்றும். அதனால் அவசரப்பட்டு எதையாவது பேசிவிட்டு பின்பு அதனால் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள். பணவரவு குறித்த நேரத்தில் கை வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகினாலும் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முதலீடுகளை கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்தப்பின்பு செய்யவும். வேகமாக விற்பனையாகும் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்குமென்பதால் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.  பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வழக்குகள் முடிய தாமதமாகும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து சில பணிகளைக் கொடுக்கும். அவைகளை செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிக்காக சில புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளைச் செய்ய வேண்டி வரும். சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடனான உறவு சீர்படும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். மாணவமணிகள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். பாடங்களை முன்னதாகவே படித்து ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒருமித்த ஒன்று போன்ற வரவேற்பையும் கொடுத்து அன்னியோன்யமாகப் பழகி நற்பெயர் எடுப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமமாக ஏற்றுக்கொண்டு நடப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருந்தாலும் அனாவசியச் செயலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக குடும்பம் நடத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைக்கும். அரசாங்க தொடர்புகளில் கூடுமான வரையில் சாதகமான பலன்களும் சலுகைகளும் கிடைக்கும். 

குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். நீண்ட காலமாக உடல் உபாதைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகி பூரண ஆரோக்கியம் பெறுவார்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறிச் செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ட துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் மறைந்து சகஜ நிலை உருவாகும். இழந்த அளவுக்கு மீண்டும் பொருள் கை வந்து சேரும். கடந்த பல ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் மளமளவென்று முடியும்.  உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். அயர்ச்சி, பலகீனம், இயலாமை, சோம்பல் போன்றவைகள் அனைத்தும் மாறி புத்துணர்ச்சியுடன் காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அசையாச் சொத்துகள் விஷயத்தில்  ஒதுக்கி வைத்திருந்த திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கூடி வரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். மேலும் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் தீர்ந்து விடும். உங்களின் ஆற்றலும் திறமையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். செய்தொழிலை மேம்படுத்த பயணங்களை மேற்கொள்வீர்கள். சொல்லும் சொல் பயனுள்ளதாக இருக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உடல்நலத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோர் உங்களுக்கு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் தேடிவரும்.  மனதிற்கினிய ஆலய வழிபாடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் வேறு இடங்களுக்கு மாறிச் சென்று காரியமாற்றும் காலகட்டமிது. 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள், குற்றமற்றவர் என்று நிரூபணமாகி வேலையில் சேர்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். கடன் பிரச்னையை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தையில் உங்கள் விளைபொருள்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சமுதாய நோக்குடைய எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்பார்ப்புகள் அகலும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். புதிய பாணியில் திறமையை வெளிப் படுத்துவார்கள். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையை காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வர சிறப்புகள் கூடும்.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று பிரபலஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். செய்தொழிலைச் செம்மையாக நடத்துவீர்கள். உங்களுக்குக்கீழ்  வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி அடையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும். 

வெளிவட்டாரத்தில் பரபரப்பாகச் செயலாற்றுவீர்கள். அதேநேரம் குழந்தைகள் வழியில் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். மேலும் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். சிலர் சிறிதளவு முதலீடு செய்து பெரிய அளவுக்கு தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம்.  பெற்றோர்களின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்களுக்கு சிறிது மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மற்றபடி நேரடியாகவோ மறைமுகமாகவே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளும் லாவகமாகச் சமாளித்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானத்திற்கு எந்தவிதக் குறைவும் இருக்காது. குடும்ப ஒற்றுமை நல்ல விதத்தில் காணப்படும்.  கூட்டாகத் தொழில் செய்தவர்கள் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு தனித்து செயல்படத் தொடங்குவார்கள். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் சிறிது தோக்கம் காணப்படுவதால் அவர்களை சற்று கூடுதலாக கவனிக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்பாளர்கள் உங்கள் காலை வாரிவிட திட்டமிடுவார்கள். 

சமயோஜித புத்தியால் சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தோரை அரவணைத்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பேச்சில் கண்ணியமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். சிலருக்கு திடீரென்று வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  சிலருக்கு வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மாற்றம் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகளும் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடம்பில் இருந்த சோர்வும் மனதிலிருந்த தெளிவின்மையும் அகன்று மிடுக்குடன் நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை முனைப்புடன் செய்வீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வர். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். 

பொருளாதார வளம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். நீர் வளத்தால் உங்கள் எண்ணங்கள் பலிதமாகும். புதிய குத்தகைகளினால் லாபம் கொட்டும்.  வயல் நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள். பால் வியாபாரத்தால் பலன் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மாற்று கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினரின் அனைத்து காரியங்களும் சுமுகமாகவே முடிவடையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார வசதி மேம்படும். 

புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். 

பரிகாரம்: ஸ்ரீ ராமரை ராமநாமத்தை ஜெபித்தபடி  வழிபடவும்.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களும் அனுகூலமாகவே முடியும். வருவாயும் வழக்கத்திற்கு மாறாகவே கூடுதலாக இருக்கும். தொழில் வழிச் சிந்தனையாளர்களை நன்கு செயல்படச் செய்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களுக்கென்று குடும்பத்திலும் வெளியிலும் ஒரு தனி மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள். 

பொருளாதாரத்தில் வளர்ச்சி பெருகிக் கொண்டே போகும். சொல்லும் சொல் வாக்கு பலிதமுடையதாக இருக்கும். வசிக்கும் வீட்டை நவீனமயமாக்குவீர்கள். ஆன்மிகம் தத்துவம் போன்றவற்றில் மனதைச் செலுத்துவீர்கள். இடம் விட்டு இடம் மாறி செய்தொழிலைச் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூல சலுகைகள் தேடிவரும். குடும்ப விஷயங்களில் மூன்றாவது மனிதரின் தலையீட்டைத் தவிர்க்கவும். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த காலகட்டத்தில் சாதகமாக இராது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் இதுவரை நினைத்ததற்கு நேர்மாறாக நடந்து வந்த காரியங்கள் மனதிற்கு பிடித்தபடி முடிவடையும். மனதில் புதிய நம்பிக்கை உதயமாகும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் யாவும் விலகி விடும். உற்றார் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். புதிய கடன்கள் எதுவும் வாங்க நேரிடாது. மனதில் இருந்த சஞ்சலங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தோருக்கு  உபகாரங்கள் செய்தாலும் திருப்திபடுத்த முடியாது. 

தீவிர முயற்சியின் பேரில் கடன்வாங்கி புதிய வீடு கட்டவும் சந்தர்ப்பங்கள் கூடிவரும். வெளியிடத்திலிருந்து வர வேண்டிய பணநிலுவைகளும் சிரமத்தின்பேரில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்தோரின் நட்பு கிடைக்கும். இதனால் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். சிலர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது. 

உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் சௌகரியங்களை எதிர்பார்க்காமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். பண விஷயங்களை உங்கள் நேர்ப்பார்வையில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வருமானத்தைப் பங்குபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப் படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்கு பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் மனநிம்மதி அடைவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசித்து எடுக்கவும். மாணவமணிகள் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புகழ், கீர்த்தி, கௌரவம், செல்வாக்கு அனைத்தும் அதிகரிக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் வந்து சேரும். குடும்பத்தில் பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த புத்திர பாக்கியமும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடிவடையும்.  உடலில் இருந்த உபாதைகள் விலகிவிடும். வெளியூரிலிருந்து வர வேண்டிய கடன்களும் வரத்தொடங்கும். சிலருக்கு தம் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதன் மூலம் புதிய மனை, வீடு வாங்க வாய்ப்புண்டாகும்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும். குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும் காலகட்டமிது. கருத்து வேறுபாடுள்ள நண்பர்களிடம் தாமரை இலைத்தண்ணீர் போல் பழகவேண்டும். தன்னிச்சையாக சுயமாகச் சிந்தித்து சரியான முடிவை எடுப்பீர்கள். 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து சமுதாயத்தில் பெரும் புகழ் பெற்றிடுவீர்கள். தரமான உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சியாகவே செல்லும். குழந்தைகளுக்கு தகுதியான இடத்திலிருந்து வரன் அல்லது வது அமைந்து மகிழ்ச்சியாகத் திருமணத்தை நடத்துவீர்கள். 

கடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் இல்லாமல் சீராகப் பணியாற்றுவீர்கள். வித்தியாசமான பாதையில் காலடி எடுத்து வைப்பீர்கள். ஏற்றத்தாழ்வுடன் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியாக உயர்வடைவார்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்கள் அதற்குரிய விசா கிடைக்கப் பெறுவார்கள். சிலர் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருள்களை வாங்குவார்கள். முயற்சிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பாராத பதவி  உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வது நலம் பயக்கும். 

வியாபாரிகள் நல்லவர்களுடன் கூட்டுச் சேர்வார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக்கடன்கள் திரும்ப கைவந்து சேரும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங்கும் வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அடைவீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கறிகள், பழங்கள், கிழங்குகளைப் பயிர் செய்து பயன் பெறவும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பீர்கள். தர்மகாரியங்கள், தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துகள் வாங்க ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். 
மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறமுடியும். 

பரிகாரம்: சனீஸ்வரர் அஷ்டகம் பாராயணம் செய்து சனிபகவானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாளாக சுணங்கி வந்த காரியங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் நல்லமுறையில் நடக்க ஆரம்பிக்கும். பொருளாதார விஷயங்களில் நல்ல விதமான, போக்கு தென்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்திலிருந்து வந்த கெடுபிடிகள் அகலும். மனதிலிருந்த இனம் புரியாத குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த சில விஷயங்களில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். 

உடல் நலம் நன்றாக இருக்கும். உடல்நலம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மகான்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் மந்திர உபதேசங்களும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்துவந்த கோபதாபங்கள் நீங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.  

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதம், பெருமிதம் போன்றவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு அற்புதமாக காரியமாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படினும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுக்குப் பணம் கிடைக்கும். சிலருக்கு ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் கணிசமான லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள். செய்தொழிலை வெளியூருக்கு விரிவுப் படுத்த வேண்டாம். குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கும். அதனால் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.  கைவிட்டுச் சென்ற வாய்ப்புகளையும் மறுபடியும் தேடிச் சென்று பெறுவீர்கள். அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். எவரையும் அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் கெடுபிடியில்லாமல் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாமல் போகும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். வியாபாரத்தை சீர்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. அதனால் கொள் முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் கிடைக்கும். பழைய கடன்களும் ஓரளவுக்கு வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து ஆதரவு பெருகும். ஆனால் அதனை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். 

கலைத்துறையினர் புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வசீகரமான பேச்சினால் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே செல்லும். 

உற்றார் உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல்வலிமை பெற உடற்பயிற்சிகளையும் மனவளம் பெற யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிபோல் தீர்ந்துவிடும். உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும்.  வருமானத்தின் பெரும்பகுதியை சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறிய முதலீடுகளில் தொழிலைப் பெருக்கி நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். அதாவது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறிவிடும். அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்களும் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். முடிபெறாது இழுத்தடித்துக் கொண்டிருந்த வம்பு வழக்குகள் வெற்றி பெறும். தைரியமாக எதையும் சமாளிப்பீர்கள். 

பழைய கடன்களையும் திருப்பி அடைந்து விடுவீர்கள். புதிய  தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். சிலருக்கு அன்னியரின் சொத்து அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும். சொந்தவீடு வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மற்றபடி உங்களின் வாழ்க்கைத்தரம் சீரும் சிறப்புமாக இருக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது, 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். இருப்பினும் செய்தொழிலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குழந்தைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு கலைத்துறையில் நாட்டம் ஏற்படும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புகள் தேடிவரும்.  பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து, கௌரவம் ஆகியவை கூடும்.

பங்கு வர்த்தகம் போன்றவைகளிலிருந்து தொடர்ந்து சிறு வருவாய் வந்து கொண்டிருக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்று  விட்டு புதிய வாகனங்களை வாங்குவார்கள். சமுதாயத்தில் உயர்தோரால் பாராட்டப் படுவீர்கள். உடன்பிறந்தோர் சற்று கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விவகாரங்களில் பெரியவர்களின் தலையீட்டினால் கோர்ட்டுக்குச் செல்லாமல் சமாதானமாகச் சென்று பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்வீர்கள். எதையும் புத்தி கூர்மையுடனும் சமாளிக்கும் திறமை உண்டாகும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சில தவிர்க்க முடியாத வேலைகளை உங்களுக்கு ஒதுக்குவார்கள். அதை முடித்துக்கொடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். எந்த நேரம் என்னவாகுமோ என்ற அநாவசியப் பதட்டம் இருக்கும். 

வியாபாரிகளுக்கு போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் இருந்து அவைகளைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோசித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாட்டார்கள். 

அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும். 

கலைத்துறையினருக்கு  இந்த ஆண்டு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம். 

பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து செல்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படி மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராது வருவது வரட்டும் என்று காரியமாற்றுவீர்கள். இறுதியில் வெற்றியும் பெறுவீர்கள். நல்லவர்கள் தானாகவே úடிவந்து நட்பு கொள்வார்கள். குடும்ப ஒற்றுமை முன்னிலும் பலமாக அமையும். தொழில் வகையில் பிரச்னை என்று எதுவும் வராது. எதிர்ப்புகள் இருப்பினும் அவைகள் கூடிய மட்டும் பலகீனமுடையதாகவே இருக்கும். அசையாச் சொத்து வகையில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். அதன் வழியில் நல்ல பெயர் ஏற்படுவதுடன் மனநிறைவும் உண்டாகும். உங்கள் மனிதாபிமான சிந்தனையால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். 

அரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான  உதவிகள் செய்வார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஓடி ஆடி கடமையுடன் உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். தடைபட்டிருந்த கட்டடப் பணிகளையும் தொடர்ந்து முழுமையாக முடித்து கிரகப்பிரவேசத்தையும் செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய யுக்திகளைக் கற்று நிபுணத்துவம் பெறுவீர்கள். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்திக் கொண்டு விழிப்புடன் செலவழிக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் பகைமை மறைந்து நேசமுண்டாகும். கொடுக்கல் வாங்கல்களில் சரளமான போக்கு தென்படும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகமாக தொழில் செய்தவர்கள் நிரந்தரமாகத் தொழில் செய்வார்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து கௌரவமும் அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கும். குடும்பத்துடன் அயல்நாடுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். 

உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.  தன்னம்பிக்கை கூடும். போட்டிகளைச் சுலபமாக எதிர்கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். ஞானிகள் மகான்களின் தரிசனம் சிரமமின்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி அங்கே குடியேறுவார்கள். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் இராது. சென்ற இடமெல்லாம் புகழ் என்று கூறலாம். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடன் நீங்கள் செயல்படுகிற காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடிவரும். வருமானம் சீரும்சிறப்புமாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்குமென்றாலும் உங்களின் பேச்சினால் சில அபவாதங்களையும் தேடிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் சுமுகமான உறவுநிலை தொடருவதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத்திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்களை அடைத்துவிடும் ஆண்டாகும். வியாபாரத்தைப் பெருக்க புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். 

விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் அனைத்து வளமையை கூட்டிக்கொள்ள முற்படுங்கள். விளைச்சல் திருப்திகரமாக இருக்குமாகையால் விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும்.  

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கனிவான பார்வை உங்கள் மீது விழும். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கி விடுவார்கள். புதிய முயற்சிகளை தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பின்பே  செயல்படுத்தவும்.

கலைத்துறையினர் படிப்படியாக வளர்ச்சியைக் காண்பார்கள். சக கலைஞர்களால் நன்மைகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். அறிவாற்றலும் பெருகும். ஞாபக சக்தியும் கூடும். 

பரிகாரம்: "நமசிவாய' என்று ஜபித்து சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com