ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 94,399 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 94,399 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 31,351 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். திங்கள்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள 22 காத்திருப்பு அறையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
அவர்கள் பெருமாளைத் தரிசிப்பதற்கு 6 மணி நேரம் ஆனது. நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி வழியாக 14 ஆயிரம் பேர், ஸ்ரீவாரிமெட்டு வழியாக 6 ஆயிரம் பேர்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர்.
டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் அவர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பலாம். 20 ஆயிரத்திற்கும் மேல் வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ3.49 கோடி
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ3.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின் காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றனர். அதன்படி சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் மொத்தம் ரூ3.49 கோடி வசூலானது.
ரூ.15.86 லட்சம் நன்கொடை
ஏழுமலையானின் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடையை அளித்து வருகின்றனர்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் மற்றும் 16,173 அமெரிக்க டாலர்கள், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ1.36 லட்சம், வேத பரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2.50 லட்சம், கல்விதானம் அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.15.86 லட்சம் மற்றும் 16,173 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
புகார் அளிக்க....
திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம். என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ் என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஊழியர்கள் உரையாற்றுவர்.
சிறிய பிரச்னைகளை ஊழியர்களும், பெரிய பிரச்னைகளை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.