காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில்...
காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை, சைதாப்பேட்டை அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 20-ம் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இன்று இரவு 6.00 மணிக்கு அருள்மிகு விநாயகர் திருவீதி உலாவுடன் சித்திரைப் பெருவிழா தொடங்குகின்றது.  ஏப்ரல் 20-ல் கொடியேற்றம் நடைபெறுகிறது. 

ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28 வரை ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்தி திருவீதிஉலா நடைபெறும். ஏப்ரல் 29-ம் தேதி அருள்மிகு நடராஜர் தரிசனம், பஞ்சமூர்த்தி திருவீதி உலா, இந்திர தீர்த்தத்தில் தீர்த்தவாரியுடன், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 

பிரதி தினம் மாலையில் திருக்கோயிலில் 6 மணி முதல் 7.30 மணி வரையிலும், இரவு திருவீதி உலாவிலும் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். பிரதி தினம் இரவில் சுவாமி திருவீதி உலாவின் போது தேவார இன்னிசை நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com